வீணாய்ப் போனதடா
எங்கள் வீரர்களின்
சுயநல மில்லா
சுதந்திர தியாகமுமே
வாங்கிய சுதந்திரம்
வாய்த்த தெங்கோ
சுரண்டிக் கொழுத்த
சூதாடி கூட்டத்திற்கே
முகமில்லா மனிதர்கள்
ஆயிரமாயிரம் உயிர் கொடுக்க
முகவரியாய் போன தெங்கோ
வர்ணத்தில் மூத்தவனுக்கே...
சுதந்திர தினமாம்
சுதந்திர தினம்
யாருக்கான தினமது
வறுமைக்கு வாழ்க்கைப் பட்ட
வறியவனுக்கா
வசதிக்காய் வாங்கிக் கொண்ட
வலதுசாரி வர்க்கத்திற்கா....
0 comments:
Post a Comment